சென்னை மண்ணடி மூர் தெருவில் அதிரையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கிவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 31/07/2023 திங்கழ்க்கிழமை அன்று மூவர் வேலைக்கு சென்றுள்ளனர்.
ஒருவர் மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார், அப்போது மதிய உணவு வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு அருகிலிருந்த கடைக்கு சென்று உணவு வாங்கி வரும்போது ஒரு நபர் உணவு டெலிவரி செய்வது போல் இவரது வீட்டிற்கு அருகிலிருந்து வெளியேறியுள்ளார்.
இவரும் வழக்கம்போல் வீட்டின் கதவை திறக்க முயன்றபோது பூட்டு உடைத்து இருந்துள்ளது.
உள்ளே சென்று பார்த்தபோது மூன்று லேப்டாப், ஒரு oneplus buds, ஊரிலிருந்து கொண்டுவந்த உறவினர்களின் ஒரு மொபைல் உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயுள்ளது.
உடனடியாக சென்னை கடற்கரை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது.
புகைப்படத்தில் உள்ள திருடனை யாருக்கேனும் அடையாளம் தெரிந்தால் கீழ்க்கானும் தொலைப்பேசி எண்களில் தொடர்ப்பு கொள்ளவும்
+91 97892 64489
+91 88705 86865
Great read! The author’s insights were very valuable. I’m looking forward to hearing what others think about this topic. Feel free to check out my profile for more discussions.