அதிரையில் நாளை தொடங்குகிறது எஸ்.எஸ்.எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்து தொடர்!!

28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி நாளை 12/06/2023 அன்று கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற இருக்கிறது, நாளை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தினை துவக்கி வைக்க அதிரை நகர்மன்ற தலைவர் திருமதி தாஹீரா அம்மாள் அப்துல் கறீம் அவர்கள், துணைத்தலைவர் திரு.இராம குணசேகரன், கடற்கரைத்தெரு ஜமாத் தலைவர் ஜனாப்.வீஎம்ஏ.அஹமது ஹாஜா, பீஜிடி முஹம்மது இஸ்மாயில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர், அனைத்து முஹல்லா தலைவர் ஜனாப்.தாஜூதீன் மற்றும் கீழத்தெரு தலைவர் ஜனாப்.ஜியாவூதீன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளார்கள்.

மேலும் நாளை முதல் நாள் ஆட்டமாக மனச்சை செவன்ஸ் மனச்சை VS யுனைடெட் நாகூர் மோத இருக்கிறார்கள். நாளை ஆட்டம் சரியாக மாலை 05:00 மணிக்கு நடைபெறும் என்பதை எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்கள் நினைவு இளைஞர் கால்பந்தாட்ட கழகம் தெரிவித்துக்கொள்கிறது.

அதுசமயம் பொதுமக்கள், சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் கால்பந்தாட்ட ரசிகர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கும் மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2 Comments
  • Josephinet
    Josephinet
    June 29, 2024 at 12:37 am

    Loved this article! It’s both insightful and entertaining. For more, check out: EXPLORE FURTHER. What are your thoughts?

    Reply
  • Elke-H
    July 13, 2024 at 8:28 am

    I like this weblog it’s a master piece! Glad I detected this ohttps://69v.topn google.Raise blog range

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders