மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு! அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

அதற்கேற்ப அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய வகையில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

ஏற்கனவே வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போன நிலையில், மீண்டும் ஒத்திவைக்கபட்டுள்ளது.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times