அதிரையில் பகுதி நேர மின் தடை அறிவிப்பு!!

வரும் 02.05.2023 காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அதிராம்பட்டினம் 33/11 KV துணைமின் நிலையத்தில் நடைபெற்று வரும் அதிராம்பட்டினம் 110 KV துணை மின் நிலைய விரிவாக்க பணிக்கு 33 KV அதிராம்பட்டினம் உயர் அழுத்த மின் பாதையை மாற்றி அமைக்கும் பணி நடை பெற இருப்பதால் அதிராம்பட்டினம் நகரம், புதுக்கோட்டை உள்ளூர், கருங்குளம் மகிழங்கோட்டை, ஏரிபுறக்கரை, ராஜாமடம் சௌந்தரநாயகிபுரம், மங்கனங்காடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் ஏற்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட பணி நடைபெறும் வரை பொது மக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பொது மக்கள் மின் தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைப் பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

உதவிசெயற்பொறியாளர்
இயக்குதலும் பராமரித்தலும்
நகர்/பட்டுக்கோட்டை

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times