வாக்குறுதிகளை செம்மையான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் 6வது வார்டு கவுன்சிலர்!!

அதிரையில் வார்டு கவுன்சிலர் தேர்தல் நடைபெறும் முன்பு பொதுமக்கள் இடையே சில வாக்குறுதிகளை அளித்து தனக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார் கணீஸ் பாத்திமா அகமது காமில் அவர்கள், வெற்றிபெற்ற பிறகு தனது வாக்குறுதிகளை செம்மையான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் 6வது வார்டு கவுன்சிலர் கணீஸ் பாத்திமா அகமது காமில் அவர்கள்…

6வது வார்டுக்கு உட்பட்ட ஆலடி குளம் பின்புறம் உள்ள சாலை சுமார் 30 வருட காலமாக இப்பகுதியில் ரோடு வசதி இல்லாமல் இருந்தது மேலும் மழை காலங்களில் அப்பகுதியில் செல்வதற்கு அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தில் இருந்து வந்தனர். இதனையெடுத்து இப்பகுதிக்கு சாலை அமைத்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து வெற்றிபெற்ற நிலையில் தற்பொழுது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி சாலை அமைத்து கொடுத்திருக்கும் 6வது வார்டு கவுன்சிலர் அவர்கள், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 6வது வார்டு கவுன்சிலர் அவர்களை பெரிதும் பாராட்டி வருகின்றனர்..

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times