இரண்டாவது வார்டுக்கு வருகை புரிந்த அதிரை நகராட்சி ஆணையர்! ஷம்சுல் இஸ்லாம் சங்க சார்பில் மனு வழங்கல்!

இன்று 17/11/2022 இரவு 7 மணி அளவில் இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட CMP லைன் பகுதிக்கு வருகை புரிந்தார்கள். அப்பொழுது இரண்டாவது வார்டு உறுப்பினர் S.H.அஸ்லம் அவர்களும் மற்றும் பொது மக்களும் வரவேற்று, வண்டிப்பேட்டையில் இருந்து
நடை பயணமாக அஜீஸ் வாடி வரையில் வந்தார்கள். நல திட்டங்கள் சம்பந்தமாக மற்றும் ரோட்டின் அவல நிலையை பொது மக்கள் முன்னிலையில் சொன்னதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு அதனை சரி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள்.

மேலும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பிலும் ஆணையர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. அதனையும் பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times