சாலை நடுவில் இருந்த மின்கம்பம் இடமாற்றம்! பொதுமக்கள் மகிழ்ச்சி!

அதிராம்பட்டினம் CMP லைன் வார்டு இரண்டு அம்மார் (ரலி) தெருவில் கடந்த 2 மாதங்களாக சாலை நடுவில் மின்கம்பம் ஒன்று அமைந்திருக்கிறது, இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக இருந்துவந்தது, இதனையெடுத்து சமுக ஆர்வர்கள் பல முயற்சிகள் செய்தும் மாற்றப்படாமல் இருந்தது, அதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி அன்று நமதூருக்கு வருகை தந்த MLA அண்ணாதுரை அவர்களை CMP லைன் பொதுமக்கள் மற்றும் வார்டு கவுன்சிலர் சந்தித்து கோரிக்கை விடுத்தனர், அதன் பின்னர் 44 நாட்கள் களித்து இன்று காலை மின்சார ஊழியர்கள் மூலம் சாலையில் இருந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது, இதனை கண்ட பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர், அதன் பின்னர் இதற்காக பாடுபட்ட சமூக ஆர்வலர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்!..

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times