அதிரை காதர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்!

செப்டம்பர் 8 2022. தமிழக அரசின் சார்பாக தமிழகம் முழுவதும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் இடைநிறுத்தம் இல்லாமல் தொடர்ந்து படிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் சைக்கிள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது

அதன் ஒரு பகுதியாக இன்று அதிராம்பட்டினம் காதர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 260 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் எம் எம் எஸ் தாகிரா அம்மாள் அப்துல் கரீம் நகராட்சி துணைத் தலைவர் இராம குணசேகரன் மற்றும் எம் கே என் டிரஸ்ட் நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

மாணவர்களுக்கு படிப்பின் அவசியத்தையும் அரசின் செயல் திட்டத்தையும் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் எடுத்துக் கூறி சைக்கிள் வழங்கி வாழ்த்தினார்

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times