அதிரையில் வருகின்ற வியாழக்கிழமை முதல் துவங்க இருக்கும் புனித புஹாரி ஷரீஃப்!

அருள் மிக்கவனும், அன்பு மிக்கவனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் அன்புடையீர். நமது அதிராம்பட்டினம் ஜாவியாவில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் – பூமான் நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழித் தொகுப்பாகிய – புனித புஹாரி ஷரீப், அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலியா மஜ்லிஸில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1443 துல்கஃதா மாதம் பிறை 29-ல் (30.06.2022) வியாழக்கிழமை காலை 6:30 மணியளவில், கண்ணியத்திற்குரிய அல் உஸ்தாதுல் முகர்ரம் K.T.முஹம்மது குட்டி ஹஜ்ரத் முதல்வர்: அல்மதரஸத்தூர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி – அதிராம்பட்டினம்) அவர்கள் முன்னிலையில் தொடங்கப்படும். 40 நாட்கள் நடைபெறும் இந்த மஜ்லிஸில், ஒவ்வொரு நாளும் காலை 7:45 மணி முதல் பயான் நடைபெறும். 7:45 மணிக்கு ஜாவியாவின் தலைவாசல் கேட் பூட்டப்படும். பயானுக்குப்பின் நமது ஈருலக வாழ்வின் வெற்றிக்காகவும், எல்லா நன்மைகளுக்காகவும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் துஆ ஓதப்பட்டு நார்ஸா வழங்கப்படும்.

குறிப்பு: வழக்கம் போல் சுப்ஹீத் தொழுகைக்கு பிறகு திக்ர் மஜ்லிஸும் நடைபெறும். துல்ஹஜ் பிறை 9, 10 மற்றும் முஹர்ரம் பிறை 9, 10 ஆகிய 4 நாட்களும் மஜ்லிஸீக்கு விடுமுறை விடப்படும். மஜ்லிஸிற்கு நன்கொடை வழங்குபவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு, அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலிய்யா கமிட்டி 1, ஜாவியா ரோடு, அதிராம்பட்டினம்.

அதிராம்பட்டினம் போன்: 04373 242135

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times