80 ஆண்டுகளுக்கு முன்னர் அதிராம்பட்டினம் நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்பை சந்தித்தனர் இதனையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்த ஹஜ்ரத் ஷைகுனா ஆலீம் அவர்களின் ஆலோசனைப்படி 40 நாட்கள் புஹாரி ஷரீஃப் ஓதுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கொடும் காலரா நோயால் பீடிக்கப்பட்டு உயிர் பலியை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அன்று ஆரம்பித்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் காரணத்தினால் இன்று வரையிலும் அதிராம்பட்டினம் நகரில் காலரா நோய் எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது அதிராம்பட்டினம் வரலாறாக உள்ளது.
இவ்வருடத்திற்கான ஹிஜ்ரி 1446 துல்காயிதா பிறை 29/ 28/05/2025 புதன்கிழமை இன்று காலை சிறப்புடன் இந்த ஆண்டுக்கான ஆரம்பம் நடைபெற்றது முதல் நாள் நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் ஷெய்குன கிப்லா முஹம்மது குட்டி முஸ்லியார் அவர்களது சிறப்பு சொற்பொழிவு வுக்கு பின்பு செய்குனா அவர்களது பிரார்த்தனை (துவா) நடைபெற்றது இந்த பிரார்த்தனையில் அகில உலக மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது இந்த்ச் நிகழ்ச்சியில் ஆந்திர மாநிலம் கடப்பா, மற்றும் கேரளாவில் இருந்தும், அதிராம்பட்டினம் அருகிலுள்ள ஊர்களில் இருந்தும் அதிகமானர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

