பயணிகளின் நலன் கருதி தொழுகை நேரத்தை மாற்றிய கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளி!

இன்று வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் இருந்து பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் – சென்னை எழும்பூர் வழியாக செகந்தராபாத் வரை சிறப்பு ரயில் இன்று முதல் இயங்க உள்ளது.

அதிரையிலிருந்து இந்த சிறப்பு ரயிலில் சென்னைக்கு இன்று வெள்ளிக்கிழமை பகல் 1:29 மணிக்கு வந்து 1:30 மணியளவில் ரயில் புறப்படும். இன்ஷா அல்லாஹ் ரயில் பிரயாணிகளின் நலன் கருதி கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் 12:35 மணிக்கு பயான் மற்றும் ஜும்ஆ தொழுகை ஆரம்பித்து 1:15 மணிக்குள் முடிவடைந்து விடும். பயணிகள் ஜும்மா முடிந்த உடன் ரயில் நிலையத்தை அடைந்து பயணத்தை மேற்கொள்ளலாம். பொது மக்கள் இந்த ரயில் சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு
கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி
அதிராம்பட்டினம்

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times