தொடர் தர்ணா போராட்டம்! ஜும்மா தொழுகை முடிந்தவுடன் போராட்ட களத்திற்கு திரளாக கலந்து கொள்ள அழைப்பு!!

அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாஃபி பள்ளியை நகராட்சி ஜப்தி செய்வதற்கு அதிரை முஸ்லிம்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட செய்தி நாம் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அதிரை நகராட்சி புல்டோசர் அனுப்பி பழைய இமாம் ஷாஃபி பள்ளியை இடித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பழைய இமாம் ஷாஃபி பள்ளியில் சீல் வைத்ததை கண்டித்து மக்கள் நேற்று அதிகாலை முதல் தற்பொழுது வரை திரண்டு வந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இமாம் ஷாஃபி பள்ளி விவகாரத்தில் அதிராம்பட்டினம் நகராட்சி முறைகேடான நடவடிக்கை எடுத்ததை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருவதால் இன்று ஜும்மா தொழுகை முடிந்ததும் அந்த இடத்திற்கு பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times