அதிரை ஆட்டோ ஓட்டுநர்களே! 10 மணி நேர தாமதத்திற்கு பிறகு நள்ளிரவில் அதிரைக்கு வந்தடைய இருக்கும் செகந்திராபாத் ரயில்!!

செகந்திராபாத் – ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில், செகந்திராபாத்தில் இருந்து நேற்று 10/01/2024 அதனுடைய குறிப்பிட்ட நேரமான இரவு 9:10 மணி அளவில் புறப்படாமல் இன்று 11/01/2024 அதிகாலை 5:00 மணி அளவில் செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டது.

இதனால் எழும்பூர்க்கு இன்று காலை 11 மணி அளவில் வந்தடையும் ரயில் தாமதத்தின் காரணமாக இன்று இரவு 9 மணி அளவில் வந்தடைந்தது. இத்தாமதத்தின் தொடர்ச்சியாக அதிரைக்கு இன்று மாலை 6:10 மணிக்கு வரவேண்டிய நிலையில் நாளை 12/01/2024 அதிகாலை 4:00 மணி அளவில் வந்தடையும் என எதிர்பாக்கப்படுகிறது

மேலும் எழும்பூரில் இருந்து அதிரைக்கு மட்டும் ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயிலில் வந்துகொண்டிருக்கின்றன மேலும் நாளை காலை 4:00 மணிக்கு வந்தடைய இருக்கும் ரயிலை அதிரை ஆட்டோ ஓட்டுநர்கள் கவனத்தில் கொண்டு பயணிகளை ஏற்ற செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times