“பழைய இமாம் ஷாபி பள்ளியை சீல் வைத்ததை கண்டித்து மக்கள் நடத்தும் போராட்டம்!” – எதிர்ப்பு தெரிவித்த பள்ளி நிர்வாக அலுவலர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி..

அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாஃபி பள்ளியை நகராட்சி ஜப்தி செய்வதற்கு அதிரை முஸ்லிம்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட செய்தி நாம் அனைவருக்கும் தெரியும்.


இந்நிலையில் இன்று அதிகாலை அதிரை நகராட்சி புல்டோசர் அனுப்பி பழைய இமாம் ஷாஃபி பள்ளியை இடித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிரை இமாம் ஷாஃபி பள்ளி நிர்வாக அலுவலர் அஷ்ரப் அவர்கள் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பழைய இமாம் ஷாஃபி பள்ளியில் சீல் வைத்ததை கண்டித்து மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times