நாளை பட்டுக்கோட்டையில் அரசு நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!! (SISYA) சார்பில் வாகன ஏற்பாடு!!

நாளை (28/10/2023) சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பட்டுக்கோட்டையில் உள்ள ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் அரசு நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது,

இந்த முகாமில் 8வது, 10வது, 12வது ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்வி தகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர் ஆகையால், விருப்பமுடையோர் இம்முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இம்முகாமில் பங்கேற்க உள்ள அதிரை இளைஞர்களுக்காக ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பங்கேற்க விரும்புவோர் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு SISYA சங்க வளாகத்திற்கு வருகை தந்து முன்பதிவு செய்துகொள்ளலாம், அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள google form ஐ பூர்த்தி செய்தும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

1 Comment
  • Veronicat
    Veronicat
    June 29, 2024 at 12:28 am

    Insightful read! I found your perspective very engaging. For more detailed information, visit: READ MORE. Eager to see what others have to say!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders