அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 99% +2 மாணவர்கள் தேர்ச்சி!!

அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 112 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 99% (111/112) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 1% மாணவர்களின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் கவனத்திற்கு :-

தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜூன்/ஜுலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேலே உயர்கல்வியைத் தொடர முடியும்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times