அதிரையில் விஷவண்டு உலா! அலர்ட் செய்த ஐ.மு.மு.க!!

அதிராம்பட்டினம் கிராணி முக்கம் அருகில் விஷவண்டு (கதண்டு) அதிகம் உள்ளது. அந்த பாதையில் பொது மக்கள் அதிகம் நடமாடும் இடமாக இருந்து வருகிறது மேலும் தினமும் இரண்டு அல்லது மூன்று நபர்களை கடித்து விடுகிறது. மேலும் இன்று கூட அய்யூப் என்பவரை கடித்து முகமெல்லாம் வீங்கிய‌ நிலையில் உள்ளார். இந்த விஷப்பூச்சியால் உயிர் போகும் அபாயம் உள்ள நிலையில் இதனை கண்ட அதிரை ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

மனுவை ஏற்று இன்று இரவு தீயணைப்பு குழு விரைந்து வந்து உடனடியாக பாதுகாப்பான முறையில் விஷவண்டு (கதண்டு) அப்புறப்படுத்தினர்.

இதற்காக முயற்சித்த ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்த தீயணைப்பு துறையினருக்கு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக
நன்றியை தெருவித்துக்கொண்டனர்.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times