அதிரையில் நாளை மின் தடை அறிவிப்பு!

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுக்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்வதை முன்னிட்டு நாளை 15-06-2022 புதன்கிழமை அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தக்குடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என்பதை தெறியப்படுத்திகொள்கிறோம்.

Prayer Times