அதிரை பேருந்து நிலையம் அருகிலுள்ள தேனீர் கடைகளில் விலையேற்றம் தீர்வு காண முயற்சித்த அதிரை நகர திமுக தலைமை!!

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தை சுற்றிலும் பல தேனீர் கடைகள் இருக்கின்றது அதில் ஒரு சில கடைகளில் மட்டும் தேனீர் மற்றும் பலகாரத்தின் விலை கேஸ் சிலிண்டர் விலைவாசி உயர்வினால் தவிர்க்க முடியாத காரணத்தினால் விலையேற்றம் செய்தார்கள் இந்த விலையேற்றம் அதிரை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது

அதிருப்தி அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொடுக்கும் தகவல் நாம் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏழைகள் வழிப்போக்கர்கள் யாசகம் கேட்போர் நம்மிடம் வந்து பெப்சி கோலா ஜூஸ் வாங்கி தாருங்கள் என்று கேட்க மாட்டார்கள் ஒரு டீ வாங்கி தாருங்கள் அல்லது ஒரு டீ குடிக்க பைசா குறைகிறது குறைகின்ற பைசாவை சொல்லி அதை தாருங்கள் என்று கேட்பார்கள் அந்த ஏழை மக்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று பாவப்பட்ட மக்கள் நலம் நாடும் சகோதரர்கள் அதிரை நகர திமுக வின் பார்வைக்கு கொண்டு சென்றார்கள்

அதிரை நகர நகராட்சித் தலைவர் எம் எம் எஸ் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் நகராட்சி துணைத் தலைவர் இராம குணசேகரன் மற்றும் அதிரை நகர திமுக கவுன்சிலர்கள் கலந்து ஆலோசித்து விலையேற்றம் செய்த டீக்கடை நடத்தும் சகோதரர்களை அழைத்து மக்களின் மனக் குமுறல்களை எடுத்துக்கூறி உங்கள் கடையில் டீ பலகாரம் ஏழைகளின் பசியை ஆற்றுகிறது இறக்கம் உள்ள நல்லுள்ளங்கள் ஏழைகளுக்கு அவர்கள் சக்திக்கு ஏற்ப வறியவர்களுக்கு டீ பலகாரம் வாங்கிக் கொடுப்பதில் மனம் கஷ்டமில்லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் அதனால் மக்கள் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டி தற்போதுள்ள சூழ்நிலையில் விலையேற்றத்தை கைவிடுங்கள் என்று அறிவுறுத்தினார்கள்

அதிரை நகர திமுக கழகத்தின் அழைப்பை ஏற்று வந்து மக்கள் மன நிலையை பிரதிபலித்த அதிரை நகர திமுக தலைமையின் அறிவுறுத்தலை பொறுமையாக கேட்ட டீ கடை உரிமையாளர்கள் விலையேற்றத்தை கைவிட முயற்சிப்பதாக வாக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு விலையேற்றத்தை கைவிட முயற்சிக்கும் டீக்கடை சகோதரர்களுக்கு அதிரை நகர திமுக கழகம் சார்பாக நன்றி கலந்த வாழ்த்துக்கள்

அதிரை பேருந்து நிலையம் அருகிலுள்ள தேனீர் கடைகளில் விலையேற்றம் தீர்வு காண முயற்சித்த அதிரை நகர திமுக தலைமை

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தை சுற்றிலும் பல தேனீர் கடைகள் இருக்கின்றது அதில் ஒரு சில கடைகளில் மட்டும் தேனீர் மற்றும் பலகாரத்தின் விலை கேஸ் சிலிண்டர் விலைவாசி உயர்வினால் தவிர்க்க முடியாத காரணத்தினால் விலையேற்றம் செய்தார்கள் இந்த விலையேற்றம் அதிரை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது

அதிருப்தி அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொடுக்கும் தகவல் நாம் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏழைகள் வழிப்போக்கர்கள் யாசகம் கேட்போர் நம்மிடம் வந்து பெப்சி கோலா ஜூஸ் வாங்கி தாருங்கள் என்று கேட்க மாட்டார்கள் ஒரு டீ வாங்கி தாருங்கள் அல்லது ஒரு டீ குடிக்க பைசா குறைகிறது குறைகின்ற பைசாவை சொல்லி அதை தாருங்கள் என்று கேட்பார்கள் அந்த ஏழை மக்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று பாவப்பட்ட மக்கள் நலம் நாடும் சகோதரர்கள் அதிரை நகர திமுக வின் பார்வைக்கு கொண்டு சென்றார்கள்

அதிரை நகர நகராட்சித் தலைவர் எம் எம் எஸ் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் நகராட்சி துணைத் தலைவர் இராம குணசேகரன் மற்றும் அதிரை நகர திமுக கவுன்சிலர்கள் கலந்து ஆலோசித்து விலையேற்றம் செய்த டீக்கடை நடத்தும் சகோதரர்களை அழைத்து மக்களின் மனக் குமுறல்களை எடுத்துக்கூறி உங்கள் கடையில் டீ பலகாரம் ஏழைகளின் பசியை ஆற்றுகிறது இறக்கம் உள்ள நல்லுள்ளங்கள் ஏழைகளுக்கு அவர்கள் சக்திக்கு ஏற்ப வறியவர்களுக்கு டீ பலகாரம் வாங்கிக் கொடுப்பதில் மனம் கஷ்டமில்லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் அதனால் மக்கள் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டி தற்போதுள்ள சூழ்நிலையில் விலையேற்றத்தை கைவிடுங்கள் என்று அறிவுறுத்தினார்கள்

அதிரை நகர திமுக கழகத்தின் அழைப்பை ஏற்று வந்து மக்கள் மன நிலையை பிரதிபலித்த அதிரை நகர திமுக தலைமையின் அறிவுறுத்தலை பொறுமையாக கேட்ட டீ கடை உரிமையாளர்கள் விலையேற்றத்தை கைவிட முயற்சிப்பதாக வாக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு விலையேற்றத்தை கைவிட முயற்சிக்கும் டீக்கடை சகோதரர்களுக்கு அதிரை நகர திமுக கழகம் சார்பாக நன்றி கலந்த வாழ்த்துக்கள்

Prayer Times