குப்பைகள் விசியத்தில் அதிக கவனம் செலுத்தும் 12 வார்டு கவுன்சிலர்!!

அதிரையில் நடுத்தெரு 12-வது வார்டு உட்பட்ட இடத்தில் இன்று திருமண வலிமா நடைபெற்றுள்ளது. இந்நிலையில், வலிமா நிறைவடைந்த பிறகு அப்பகுதியில் அதிக குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இதனை கண்ட 12-வது வார்டு கவுன்சிலர் ராலியா முகமது சுஹைப் அவர்கள் துரிதமாக செயல்பட்டு இரவோடு இரவாக அதனை தாமதப்படுத்தாமல் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துரிதமாக செயல்பட்ட 12-வது வார்டு கவுன்சிலர் அவர்களுக்கு டைம்ஸ் ஆப் அதிரை இணையதளத்தில் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Prayer Times