அதிராம்பட்டினம் கரையூர்தெரு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேற்று (23-06-2025) காலை 9.00 மணி அளவில் பாராளுமன்ற உறுப்பினர் திரு ச.முரசொலி அவர்கள் மற்றும் அதிராம்பட்டிணம் நகர் மன்றத் தலைவர் திரு அப்துல் கரீம் அவர்கள் நகர் மன்றத் துணைத் தலைவர் திரு குணசேகரன் அவர்கள் மற்றும் திமுக பொறுப்பாளர்கள், அதிராம்பட்டினம் (வார்டு உறுப்பினர்கள்) மக்கள் பிரதிநிதிகள் திரு.V. சேதுராமன், திரு.C.வடிவேலு அவர்களும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களும், செஞ்சிலுவை சங்கம், அமைப்பாளர்களும், தன்னார்வலர் உறுப்பினர்களும், கிராம மக்கள், பெற்றோர்கள், வருகைப் புரிந்தனர்.
2024-2025 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி அதிராம்பட்டினம், கரையூர்தெரு அரசு உயர்நிலைப்பள்ளி என்றும், பொறுப்பு தலைமையாசிரியர் திருமதி. கா.ஸ்ரீபிரியா அவர்களையும், அனைத்து பட்டதாரி ஆசிரியர்களையும் அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் என அனைவருக்கும் பொன்னாடை அறுவித்து, சான்றிதழ்கள் வழங்கி, பதக்கம் அணுவித்து பாராட்டு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர்.
பிறகு பள்ளிக்குத் தேவையான சமையல் கூடம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், சுற்றுச்சுவர், பள்ளி வளாகத் தரைத்தளம் ஆகிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு உறுதிக்கூறினார்.
மாணவர்களை நன்றாக படிக்கவும் இதேபோல் அடுத்த ஆண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்று வாழ்த்துக் கூறினார்.
