அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி இன்று சிட்னி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.
இப்போட்டியில் அதிரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கு பெறும் இப்போட்டியினை இன்று ஷம்சுல் இஸ்லாம் சங்க துணை தலைவர் சரபுதீன் அவர்களும், அதிராம்பட்டினம் முன்னால் சேர்மனும் திமுகவின் மேற்கு பொறுப்பாளருமாகிய S.H.அஸ்லம் போட்டியினை துவங்கி வைத்தனர்.
இன்று நடைபெற்ற போட்டியில் 6 அணிகள் கால் இறுதிக்கும் ஒரு அணி அரை இறுதிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.. நாளை மீதம் உள்ள லீக் போட்டிகள், கால் இறுதிப்போட்டிகள், அரை இறுதிப்போட்டிகள் மற்றும் மாலை இறுதிப்போட்டியும் சிறப்பாக நடைபெற இருக்கிறது…
கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் இப்போட்டியினை கண்டு களிக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.










