அதிரையில் பலர் வீட்டை தட்டும் INCOME TAX NOTICE… என்ன காரணம் தெரியுமா?

நமது ஊரில் அதிகமானோர் வங்கிக் கணக்கு வைத்திருப்பது சகஜம். ஆனால் அதை எவ்வாறு நாம் பயன்படுத்துகிறோம் என்பதை பற்றி என்றைக்காவது தெரிந்திருக்கிறோமா?

அதைப் பற்றிய விழிப்புணர்வு செய்திதான் இது.

நம்மில் சிலர் கரண்ட் அக்கவுண்ட் என்றும் சேவிங்ஸ் அக்கவுண்ட் என்றும் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோம்.

சேவிங்ஸ் அக்கவுண்டில் 10 லட்சத்திற்கும் மேல் பணப் பரிவர்த்தனை செய்தாலோ அல்லது கரண்ட் அக்கவுண்டில் 50 லட்சத்திற்கும் மேல் பணப் பரிவர்த்தனை செய்தாலோ நாம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?

மேற்கூறிய தொகைக்கு மேல் இருந்தால் நம்முடைய வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டு விபரங்களை வங்கி, வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்து விடும்.

பின் வருமான வரித்துறை நாம் அதற்குரிய வருமான வரித்தாக்கல் செய்து இருக்கிறோமா என சரிபார்த்துவிட்டு கட்டாவிட்டால் நமக்கு வருமான வரித்தொகை, அபராதம் மற்றும் வட்டியுடன் நோட்டீஸ் அனுப்பும்.

வங்கிக் கணக்கில் அதிகமாக பணப்பதிவர்த்தனை செய்வோர் யாரெனில் மற்றவர்களுக்காக தனது வங்கிக் கணக்கை பயன்படுத்துதல் (10 லட்சத்தை தாண்டினால்), மற்றும் வெளிநாடுகளுக்கு விசாபெற வேண்டும் என்று வங்கிக் கணக்கில் அதிக பணத்தொகை வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணப்பரிவர்த்தனை செய்வோர் போன்றவர்கள் இதில் உள்ளடங்குவர்.

இவர்கள் அல்லாமல் வருடத்திற்கு 10 லட்சத்திற்கும் மேல் பண பரிவர்த்தனை செய்பவரும் அடங்குவர்.மேலும்,

வருமான வரி அறிவிப்பை ஈர்க்கக்கூடிய 5 பரிவர்த்தனைகள்:-

1) ஒருவரின் சேமிப்புக் கணக்கில் (Savings Account) ₹10 லட்சத்திற்கும் அதிகமான தொகை அல்லது ஒருவரின் நடப்புக் கணக்கில் (Current Account) ₹50 லட்சத்திற்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்தல்.

2) ஒருவரின் FD கணக்கில் ₹10 லட்சத்திற்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்தல்.

3) கிரெடிட் கார்டு பில் செலுத்துதலில் ₹1 லட்சத்தின் ரொக்க வரம்பை மீறுதல்.

4) பரஸ்பர நிதிகள் (Mutual Fund), பங்கு (Share Market), பத்திரம் (Bond) அல்லது கடன் பத்திரங்களில் (Debenture) ₹10 லட்சத்திற்கு மேற்பட்ட தொகையில் ரொக்கமாக செலுத்துதல்.

5) ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தில் ₹30 லட்சத்திற்கும் அதிகமான தொகை ரொக்கமாக செலுத்துதல்.மேலும்,

UPl மீதான வரி

UPI பரிவர்த்தனைகள் மூலம், மக்கள் தேவைப்படும் போதெல்லாம் பணத்தை அனுப்பலாம் அல்லது பெறலாம். ரூ.50,000 வரையிலான தொகைக்கான ரசீதுக்கு வரி விலக்கு (Tax Exempt) அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் உள்ள எதுவும் பரிசாகக் (Gift) கருதப்பட்டு வரி விதிக்கப்படும்.

இருப்பினும், உங்கள் நண்பர் உங்களுக்குக் கடன்பட்ட பணத்தைப் பெற்றிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படாது

எனவே நாம் இந்த விபரங்களை அறிந்து வங்கிக் கணக்கை விழிப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders