அதிராம்பட்டினம் வழியாக செல்லும் செகந்திராபாத் – இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் செகந்திராபாத் (ஹைதராபாத்) – இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செகந்திராபாத் – இராமநாதபுரம்
செகந்திராபாத் – இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 07695) 2023 டிசம்பர் 06ம்தேதி முதல் 2024 ஜனவரி 31 தேதி வரை இயக்கப்பட உள்ளது

வாராந்திர சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் இரவு 09.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும்.

இராமநாதபுரம்-செகந்திராபாத்

இதைப்போல மறுமார்க்கத்தில் இராமநாதபுரம் செகந்திராபாத் விரைவு ரயில் (வண்டி எண் 07696) 2023 டிசம்பர் 08 ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 02ம்தேதி வரை இயக்கப்பட உள்ளது.

வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு இராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை இரவு 9.50 மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times