அதிரை மகாதிப் நடத்தும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்!!

அதிரையில் 2011 வருடம் துவங்கப்பட்ட அதிரை மகாதிப் 11 வருடங்களாக இயங்கி வருகிறது, அதிரை மகாதிப் 4 வருடங்களுக்கு முன்பு பல கிராஅத் அங்கங்களும் மேலும் வெளியூர்களில் இருந்து பல தலைசிறந்த காரிகளையும் அழைத்து சிறப்பாக கிராஅத் அரங்கம் நடத்தி உள்ளனர்.

அந்த வகையில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நாளை (28/12/2022) காலை 9:30 மணி முதல் 12 மணி வரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

மஸ்ஜித்களின் மூலம் சமூக கட்டமைப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுவதற்காக அஷ்-ஷைக் எம்.ஐ.எம்.ரிஸ்வி முஃப்தி ஹஜ்ரத் அவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.

உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், மக்தப் மேம்பாட்டுக் குழு & சமூக ஆர்வளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது…

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times