அதிரையில் 110KV ! அடிக்கல் நாட்டி துவங்கி வைத்த MLA! மகிழ்ச்சியில் அதிரை மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 29.10.2022 துணை மின் நிலையத்திற்கான 110 KV அடிக்கல் நாட்டு விழா காலை 10.30 மணி அளவில் அதிரையில் நடைபெற்றது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமிகு கா.அண்ணாதுரை அவர்கள் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை MLA அவர்களும், அதிரை நகராட்சி மன்ற தலைவர் MMS.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் அவர்களும், துணைத்தலைவர் இராம.குணசேகரன் அவர்களும், D.E. மாறன், அதிரை கவுன்சிலர்கள், முன்னாள் சேர்மன் எஸ்.ஹெச்.அஸ்லம் மற்றும் எஸ்டிபிஐ மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times