![](https://timesofadirai.com/wp-content/uploads/2022/05/A3CC7BFC-9DBB-4C29-852D-165683D419A2-1024x684.jpeg)
நமதூர் இஜாபா பள்ளியின் மக்தப் ஆண்டு நிறைவு விழா நாளை மாலை நடைபெற உள்ளது.
இப்பள்ளியில் இஸ்லாத்தைப் பற்றிய கொள்கை மார்க்க சட்ட திட்டங்கள் ஹதீஸ் குர்ஆன் மனனம் என பல்வேறு வகுப்புகள் சுமார் 169 மாணவர்களையும் மற்றும் ஏழு ஆசிரியர்களையும் கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இப்பள்ளியின் வகுப்பு எண்ணிக்கை பூஜ்ஜியம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ளது.
வகுப்பு நடைபெறும் நேரங்கள் காலை 5:50 மணியிலிருந்து காலை 8 மணி வரை நடைபெறுகிறது.
சிறுபிள்ளைகளுக்கு வகுப்பு நடத்தப்படும் நேரம் அஸர் தொழுகையில் இருந்து மாலை 5 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மாலை 6 மணியிலிருந்து இஷா தொழுகை வரை குர்ஆன் மனனம் செய்யும் வகுப்பு தனியாக நடத்தப்பட்டு வருகிறது.
Post Views: 216