அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த நீடாமங்கலம் மர்ஹூம் அப்துல் சலாம் அவர்களின் மகனும், பூதமங்கலம் மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் நாகூர் பிச்சை, நைனா முகம்மது, மர்ஹூம் முகம்மது இக்பால் ஆகியோரின் மச்சானும், நிஜாமுதீன், ஹாஜா முகைதீன், ஃபைசல் அகமது ஆகியோரின் தாய்மாமாவும், முகம்மது கனி, ஹனீஃபா இவர்களின் சகோதரரும், மீன் மார்கெட் தாஜுதீன் அவர்களின் மச்சானும், அக்பர் அலி அவர்களின் மாமனாரும், முகம்மது அவர்களின் தகப்பனாருமான கோடீஸ்வரர் என்கிற நாகூர் பிச்சை அவர்கள் நேற்று (28/11/2025) வெள்ளிக் கிழமை மாலை அவர்களின் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (29/11/2025) சனி கிழமை காலை 10:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


