அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு செக்கடி பள்ளியில் நடைபெற இருக்கிறது இதற்கான முன்பதிவு: 01.07.2025 முதல் 15.07.2025 வரை நடைபெற இருக்கிறது இவ்வகுப்பிற்கு வயது ஒரு தடையல்ல, ஆர்வம் இருந்தால் போதும்!
குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு திக்கி திக்கி ஓதுபவருக்கு இரண்டு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 1462
வகுப்பின் சிறப்பம்சங்கள்:
- அடிப்படையிலிருந்து பயிற்சியளிக்கப்படும்: அரபு எழுத்துக்கள் உச்சரிப்பு, ஓதும் முறை என அனைத்தும் ஆரம்பத்திலிருந்தே கற்றுத் தரப்படும்.
- குர்ஆனை பிழையின்றி, அதன் சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்கான தஜ்வீத் சட்டங்கள் முழுமையாகப் பயிற்றுவிக்கப்படும்.
- குர்ஆனை அழகிய குரலில் ஓத பயிற்சி அளிக்கப்படும்
குறிப்பு : ஆண்கள் மட்டும்
தீனியாத் பாடத்திட்டங்கள் : குர்ஆன், ஹதீஸ், அகாயித், மஸாயில், இஸ்லாமிய பயிற்சி & மொழி
சேர்க்கை தொடர்புக்கு: +91 98946 48187



