அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்திய 17 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி கடந்த 14.06.2025 அன்று துவங்கியது. இன்று 16.06.2025 நடந்த இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் அதிரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து 16 அணிகள் பங்கு பெற்றது இப்போட்டியினை இன்று ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் பேராசிரியர் அப்துல் காதர், சங்க துணை தலைவர் சரபுதீன், சங்க நிர்வாகிகள் ஹாஜா சரீஃப் & அன்வர் , அதிராம்பட்டினம் முன்னால் சேர்மனும், திமுகவின் மேற்கு பொறுப்பாளருமாகிய S.H.அஸ்லம் அவர்களும், IMMK அதிரை அஹமது ஹாஜா ஆகியோரும் போட்டியினை துவங்கி வைத்து சிறப்பித்தனர்.
இப்போட்டியில் பாலயன்கோட்டை அணி முதல் பரிசை வென்றது, இரண்டாவது பரிசை அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், மூன்றாம் பரிசை அதிரை ABCC அணியும், நான்காம் பரிசை மதுக்கூர் ப்ளேய் அணியும் வென்றது.














