அதிரை சிட்னி கிரிக்கெட் தொடர்: கோப்பையை வெல்லப்போவது யார்? இன்று மாலை இறுதிப்போட்டி’!

அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி 14-06-2025 அன்று சிட்னி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இப்போட்டியில் அதிரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கு பெறும் இப்போட்டியினை ஷம்சுல் இஸ்லாம் சங்க துணை தலைவர் சரபுதீன் அவர்களும், அதிராம்பட்டினம் முன்னால் சேர்மனும் திமுகவின் மேற்கு பொறுப்பாளருமாகிய S.H.அஸ்லம் போட்டியினை துவங்கி வைத்தனர்.

இந்நிலையில் இத்தொடரின் இறுதிப்போட்டி சிட்னி (SFCC) அணியினருக்கும் பாளையங்கோட்டை அணியினருக்கும் இன்று (16-06-2025) மாலை 4:30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் இப்போட்டியினை கண்டு களிக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders