பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான இணைப்பு சிறப்பு பேருந்து பட்டுக்கோட்டை முதல் அதிரைக்கு இன்று நள்ளிரவு முதல் தொடக்கம்!

வண்டி எண் : 16103 தாம்பரம் 🔁 ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் தினசரி மாலை 6:10 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு தினசரி நள்ளிரவு 01:08 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வருகை தருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சென்னை தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்ல கூடிய பாம்பன் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலுக்கான நிறுத்தம் அதிராம்பட்டினத்தில் இல்லாததால் அருகில் இருக்கும் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்த ரயில் நள்ளிரவு 01:08am மணிக்கு பட்டுக்கோட்டை வந்தடைகிறது. அந்தசமயத்தில் பொது போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வருகைக்கு ஏற்றவாறு பட்டுக்கோட்டையிலிருந்து நள்ளிரவு அதிராம்பட்டினத்திற்கு தினசரி சிறப்பு பேருந்து இயங்கயுள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்…

குறிப்பு :
பட்டுக்கோட்டை to அதிராம்பட்டினம் பேருந்தின் கடைசி சேவையாக பட்டுக்கோட்டையில் இரவு 11:15pm மணிக்கு புறப்பட்டு அதிராம்பட்டினம் இரவு 11:30pm வருகை தரும் பேருந்து ராமேஸ்வரம் வரை செல்லும்… இந்த பேருந்தை பயணிகள் தவறவிட்டால் மீண்டும் அதிகாலை 4:00am மணிக்கு பேருந்து சேவை தொடங்கும்.. 11:30pm மணிக்கு மேல் வெளியூர்களிலிருந்து வரும் அதிராம்பட்டினம் பயணிகள் தற்போது இயங்க இருக்கும் பட்டுக்கோட்டையிலிருந்து நள்ளிரவு 01:15am மணிக்கு மேல் புறப்பட்டு அதிராம்பட்டினத்திற்கு இன்று (12-05-2025) முதல் தினசரி வருகை தரும் இந்த சிறப்பு பேருந்தை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்…

இங்ஙனம்
அதிராம்பட்டினம் ரயில் ஆர்வலர்கள்

Prayer Times

Advertisement