அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா வெற்றிலைக்கார தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.மு. காதர் முகைதீன் அவர்களின் மகனும், M. முகம்மது இக்பால் அவர்களின் மருமகனும், K. பசீர் அகமது, மர்ஹூம் M. தாவூது இபுராகிம் இவர்களின் சகோதரரும், A. சம்சுதீன் அவர்களின் மாமனாரும், M. தமீம் அன்சாரி, M. அப்துல் மாலிக், M. சேக் தாவூது, M. அய்யூப்கான், M. பிஸ்மில்லாகான், சின்னவன் என்கிற M. சாகுல் ஹமீது ஆகியோரின் தாய் மாமாவும், லைலாத்தி M. ஹாஜா ஜலாலுதீன் அவர்களின் சகலையும், M. முகைதீன் பக்கிர், M. அன்வர்தீன் இவர்களின் மச்சானும், மர்ஹூம் M. அப்துல் ஹக்கீம் அவர்களின் தகப்பனாருமான சபா கனி என்கிற M. முகம்மது கனி அவர்கள் இன்று 23/09/2024 திங்கள் கிழமை அதிகாலை 5:30 மணியளவில் நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கம் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 23/09/2024 மஃரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


