அதிரையில் மாரத்தான் போட்டி! அனைவரையும் அழைக்கிறது இமாம் ஷாஃபி பள்ளி’!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இமாம் ஷாஃபி பள்ளி 1973ல் ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற 2023 வருடத்துடன் 50வது ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அதனை முன்னிட்டு பல போட்டிகளை நடத்தி வருகிறது, இந்நிலையில், வருகின்ற 31/12/2022 சனிக்கிழமை அன்று அதிரையில் 8KM அளவில் மாரத்தான் போட்டியை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் காலை 7 மணி அளவில் நடத்த உள்ளது.

மேலும் இது மூன்று பிரிவாக நடைபெற உள்ளது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவும், 19 – 44 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவும், 45 வயதிற்கு மேல் பட்டவர்கள் ஒரு பிரிவும் என 3 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு :- முன் பதிவு செய்யும் முதல் 500 நபர்களுக்கு T-shirt இலவசமாக வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..

முன் பதிவு : 86106 34900

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times