அதிரை வரலாற்று ஆய்வகம் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி!!

Descriptive Alt Text

அதிரை வரலாற்று ஆய்வகம் சார்பாக நடைபெற்ற “அதிரை பள்ளிவாசல்களின் வரலாறு” கட்டுரை போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று (20/09/2024) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ஷாதுலிய்யா புதுப்பள்ளி வாசலில் நடைபெற்றது. அதில் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் தமிழ்த் துறை தலைவருமான பேரா. அப்துல் காதர் சார் அவர்களும், அக்கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியரும் அதிரை வரலாற்று ஆய்வகத்தின் செயலாளரும் மூத்த ஆலோசகருமான, பேரா. அப்துல் காதர் சார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு போட்டியில் தேர்வு பெற்றவர்களுக்கான பரிசுகளையும் வழங்கினார்கள்.

முதல் பரிசு பெற்ற முஹம்மத் இஸ்மாயீல் அவர்களுக்கும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் கலந்து கொண்ட அனைவருக்கான நினைவு பரிசு விரைவில் வழங்கப்படும்.

தகவலுக்கு:
அதிரை வரலாற்று ஆய்வகம்
அதிரை. +918838215165

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders