தஞ்சையில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

தஞ்சை இராஜா சரபோஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை 31/08/2024 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணிவரை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஊரக மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் தங்களுக்கு ஏற்றாற் போல் தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற்றிட வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தனியார் துறை நிறு வனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொள்ள உள்ளனர். 8 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பி.இ பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். இம்முகாமிற்கு வருபவர்கள் கல்விச் சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்), ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜம் தெரிவித்துள்ளார்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders