Day: January 5, 2023

தமிழகம் | இந்தியா

ஜனநாயகத்தின் 4வது தூணை நசுக்கும் அண்ணாமலை – மீடியா முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பு கண்டனம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைபத்திரிக்கையாளர்களை இழிவு செய்து மிரட்டும் தொனியில்பேசி ஜனநாயகத்தின் நான்காவது தூணை சிதைத்துவருகிறார் இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகள் பத்திரிக்கைசங்கங்கள் என பல்வேறு தரப்பும் கடும் கண்டனத்தை பதிவுசெய்து வருகிறார்கள் அந்த வகையில் மீடியா முன்னேற்றகழகம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அதிரை ஹசன் தமது முகநூல் பக்கத்தில் தமது கண்டனத்தை பதிந்துஇருக்கிறார் அதில் குறிப்பிட்டு உள்ளதாவது,  மத்திய பாஜக அரசு டிஜிட்டல் இந்தியா என பிதற்றுவதுஎல்லாம் வாய் சவடால் என்றும் ,தமிழக  பாஜக தலைவர்அண்ணாமலை அநாகரிக அரசியல் செய்கிறார் எனவும்குறிப்பிட்டு இருக்கிறார்  பக்குவமில்லாத பேச்சுக்களால்பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து இழிவு செய்து வருகிறார்எனவும் .  இச்செயல்  வன்மையாக கண்டிக்கத்தக்கது எனகுறிப்பிட்டு இருக்கிறார். டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கி விட்டோம் என மோடிமுழங்குகிறார் ஆனால் அக்கட்சியினர் டிஜிட்டல் ஊடகங்களை புறக்கணிப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக நேற்றுபத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது  அண்ணாமலை நடந்து கொண்ட விதம் முகம் சுளிக்க வைத்துள்ளது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீப நாட்களாகவே மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார் என் அதில்தெரிவித்திருக்கிறார். ராஃபேல் வாட்சிக்கான  பில்ளை கேட்டால் சட்டென்றுஅண்ணாமலை டென்ஷனாகி விடுவதாகவும்  இதனால் அவருக்கு முழு ஒய்வு தேவைப்படுகிறது, பாஜக முன்னாள்மாநில நிர்வாகி காயத்திரி ரகுராம் பிரச்சனைக்கு பின்னர்பதற்றத்துடனே இருக்கும் அண்ணாமலைக்கு உடனடியாகஓய்வு  வழங்கிட தேசிய பாஜகவை கேட்டு கொள்வதாக தமதுமுகநூல் பக்கத்தில் ஹசன் தெரிவித்திருக்கிறார். மேலும்பாஜக அண்ணாமலை குறித்து தேசிய பத்திக்கையாளர்கள்நல ஆணையத்திடம் விரைவில் புகார் அளிக்க உள்ளதாககூறுகிறார்.
error: Content is protected !!