அதிரையில் நாளை நடைபெற இருக்கும் மக்தப் இஹ்யாவுஸ் சுன்னாஹ்வின் ஆண்டு விழா!!
அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் அமைந்துள்ள இஹ்யாவுஸ் சுன்னாஹ் மக்தப் மதரஸா ஆண்டு விழா நாளை (12.05.2023) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து நடைபெற இருக்கிறது. அதில் பள்ளி மக்தப் மாணவர்களின் நிகழ்ச்சிகளும், ஆலிம் பெருமக்களின் சொற்பொழிவும் மற்றும் பரிசளிப்பும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. ஆகையால் ஜமாத்தார்கள், பெற்றோர்கள், பெரியோர்கள் இளைஞர்கள் மற்றும் முஹல்லாவாசிகள் யாவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்துத் தருமாறு அன்புடன் அழைக்கிறார்கள். இடம் : கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு எதிரே உள்ள மைதானத்தில். குறிப்பு : தாய்மார்களுக்கு மக்ரிப், இஷா தொழுகைக்காக பெண்கள் மதரஸாவில் ஏற்பாடு செய்யப்படுள்ளது. இன்ஷா அல்லாஹ், முழு நிகழ்ச்சியும் TIMES OF ADIRAI யூடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed